அதிராம்பட்டினத்தில் சீனியர்கள் திட்டியதால் வகுப்பறையில் கல்லூரி மாணவி தற்கொலை…!!

Read Time:1 Minute, 17 Second

f7fcf2e4-c884-466b-ba45-1416b1bac31e_S_secvpfதஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செட்டி தெருவை சேர்ந்தவர் சங்கர். எல்.ஐ.சி. ஏஜெண்டு. இவரது மகள் சுலோச்சனா (18). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

மேலும் என்.சி.சி.யிலும் இருந்து வந்தார். குடியரசு தின விழாவை முன்னிட்டு என்.சி.சி. பயிற்சி நடைபெற்றது. இதனை சுலோச்சனா சரியாக செய்யவில்லை என கூறப்படுகிறது.

இதனால் சீனியர் மாணவிகள் திட்டியதாக தெரிகிறது.

இது அவருக்கு மன வேதனையை அளித்தது. இன்று கல்லூரி விழாவுக்கு சென்ற அவர் வகுப்பறையில் தனது துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அதிராம்பட்டினம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாணவி தற்கொலை சம்பவம் கல்லூரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெற்றோர்களிடம் மாணவிகள் மீது பாலியல் புகார் கூறி மிரட்டல்…!!
Next post கோவையில் தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணை காப்பாற்றிய போலீசார்…!!