அமெரி்க்காவின் சான்டியாகோ ராணுவ மருத்துவமனையில் மர்ம நபர் திடீர் துப்பாக்கிச்சூடு: போலீசார் குவிப்பு…!!
Read Time:1 Minute, 21 Second
அமெரி்க்காவின் சான்டியாகோவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் மர்ம மனிதன் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
”சாண்டிகோவின் கடற்படை மருத்துவ மையம் உள்ள பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகவும், அனைவரும் உடனடியாக வெளியேறுமாறும் அல்லது ஒளிந்து கொள்ளுமாறும் அல்லது எதிர்த்து போராடுமாறும்” பேஸ் புக் பக்கத்தில் கட்டிடத்தின் நிர்வாகத்தினர் எச்சரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து மருத்துவமனையில் உள்ளவர்கள் ஓட்டம் பிடித்தனர். சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனையை அமெரிக்க பாதுகாப்புபடையினர் சுற்றி வளைத்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ராணுவ மருத்துவமனையானது பல்போவா பூங்கா பகுதியில், சாண்டியாகோவின் பிரபல உயிரியல் பூங்காவிற்கு அருகில் உள்ளது.
Average Rating