பாலியல் உறவின் பின் கணவரின் ஆணுறுப்பை வெட்டி துண்டித்த மனைவி…!!
பாலியல் உறவின் பின் கணவரின் ஆணுறுப்பை வெட்டி துண்டித்த மனைவி – மலேஷியாவில் சம்பவம்-
மலேஷியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் பாலியல் உறவின் பின்னர் தனது கணவரின் ஆணுறுப்பை கத்தியால் வெட்டித் துண்டித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
மலேஷியாவின் ஜெம்போல் மாவட்டத்தின் பாத்து கிக்கிர் நகரில் கடந்த புதன்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஜம்போல் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் நூர்ஸெய்னி மொஹ்ட் நூர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானியரான 44 வயது நபர் ஒருவரின் ஆணுறுப்பை அவரின் 51 வயது மனைவி துண்டித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி நபர் முரட்டுத்தனமான வகையில் பாலியல் உறவில் ஈடுபட்டதாலேயே அவரின் மனைவி இந்நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
தனது ஆணுறுப்பு துண்டிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த மேற்படி நபர், கோலாலம்பூரிலுள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவரின் ஆணுறுப்பு சத்திரசிகிச்சை மூலம் மீண்டும் பொருத்தப்பட்டுள்ளது.
இந்நபரின் மனைவி ஏற்கெனவே மற்றொருவரை திருமணம் செய்து 5 பிள்ளைகளுக்கு தாயானவர் எனக் கூறப்படுகிறது.
Average Rating