தமிழ் தேசிய கூட்டமைப்பு ஸ்கொட்லாந்து பயணம்…!!

Read Time:1 Minute, 51 Second

TNA (6)அரசியல் யாப்புக்கான தங்களின் யோசனைகளை தயாரிக்கும் நோக்கில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஸ்கொட்லாந்து சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருடன் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனும் சென்றுள்ளார்.

அங்கு பல்வேறு அரசியல் யாப்பு சம்பந்தமான நிபுணர்களை சந்தித்து, குறித்த யோசனையை தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாரிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள காணிகளுள் போதுமான அளவு இன்னும் விடுவிக்கப்படாததன் காரணமாக, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அரசாங்கம் மீதான நம்பிக்கை வீழ்ச்சி அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளை சென்று பார்வையிட்டு, அங்குள்ள மக்களிடம் உரையாற்றும் போது இவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

இன்னும் விடுவிக்கப்படாதுள்ள காணிகளை முழுமையாக விடுவிக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறத்தியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செக்ஸ் வழக்கில் இந்திய யோகா குருவுக்கு ரூ.6½ கோடி அபராதம்: அமெரிக்க கோர்ட்டு உத்தரவு…!!
Next post பிரமாண்டமான சூரிய மண்டலம் கண்டுபிடிப்பு…!!