பேஸ்புக் கள்ளக்காதல் கசந்ததால் உயிரை மாய்த்துக்கொண்ட பெண்…!!

Read Time:4 Minute, 36 Second

gfgfgகண­வனை கைவிட்டு விட்டு பேஸ்புக் நண்­ப­ருடன் ஓடிச்­சென்ற பெண் உயிரை மாய்த்­துக்­கொண்­டுள்ள சம்­ப­வ­மொன்று தமி­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

இந்த சம்­பவம் குறித்து பொலிஸார் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது, நெல்லை மாவட்டம் அம்­பா­ச­முத்­திரம் பகு­தியைச் சேர்ந்­தவர் ஜெனீபர் (வயது 31). இவ­ரு­டைய கணவர் கிறிஸ்­டோபர். இவர்­க­ளுக்கு 11 வயதில் ஒரு மகள் உள்ளார்.

ஜெனீபர் தனது ஊரின் அரு­கி­லுள்ள ஒரு கணினி நிலை­யத்­துக்கு சென்று வரு­வதை வழ­மை­யாக கொண்­டுள்ளார். இதன்­போது அவர் பேஸ்­புக்கை பயன்­ப­டுத்தி வந்­துள்ளார்.

அதன் மூலம் அவ­ருக்கு கடந்த இரு ஆண்­டு­க­ளுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் மொடக்­கு­றிச்சி அருகேஉள்ள லக்­கா­பு­ரத்தைச் சேர்ந்த அசோக்­குமார் (26) என்­ப­வ­ருடன் அறி­முகம் ஏற்­பட்­டுள்­ளது.

இதன்­பின்னர் இரு­வரும் பேஸ்புக் மூலம் அடிக்­கடி செட் செய்­துள்­ளனர். இது நாள­டைவில் இவர்­க­ளுக்­கி­டையே கள்­ளக்­கா­த­லாக மலர்ந்­துள்ளது. பின்னர் இரு­வரும் செல்­போனில் பேசி தங்­க­ளது கள்­ளக்­கா­தலை வளர்த்து வந்­துள்­ளனர்.

இதை­ய­டுத்து ஜெனீபர் அசோக்­கு­மாரை திரு­மணம் செய்து கொள்ள முடிவு செய்­துள்ளார்.

ஜெனீபர் தனது காதலன் கூறி­ய­படி வீட்டை விட்டு வெளி­யேறி ஈரோடு மாவட்டம் பவானி கூடு­து­றைக்கு சென்­றுள்ளார்.

அங்கு இரு­வரும் மாலை மாற்றி திரு­மணம் செய்­து­கொண்­டுள்­ளனர். அதன்­பின்னர் இரு­வரும் வீடெ­டுத்து வசித்து வந்­துள்­ளனர்.

இதற்­கி­டையே ஜெனீ­பரை காண­வில்லை என்று அவ­ரு­டைய முதல் கணவர் கிறிஸ்­டோபர் நர­சிங்­க­புரம் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார். அதன்­பேரில் பொலிஸார் வழக்­குப்­ப­திவு செய்து விசா­ரணை நடத்தி வந்­தனர்.

விசா­ர­ணையில் ஜெனீபர் மொடக்­கு­றிச்சி லக்கா புரத்தை சேர்ந்த அசோக்­கு­மாரை திரு­மணம் செய்துகொண்­டது தெரியவந்­தது.

இதைத்­தொ­டர்ந்து பொலிஸார் ஜெனீ­பரை மீட்டு நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

அப்­போது அவர், தனக்கு கிறிஸ்­டோ­ப­ருடன் வாழ பிடிக்­க­வில்லை என்றும், அசோக்­கு­மா­ரு­டன் தான் வாழ விரும்­பு­வ­தா­கவும் தெரி­வித்தார். இதை­ய­டுத்து அவர் அசோக்­கு­மா­ருடன் அனுப்பி வைக்­கப்­பட்டார்.

இந்­த­ நி­லையில் ஜெனீ­ப­ருக்கும், அசோக்­கு­மா­ருக்கும் அடிக்­கடி தக­ராறு ஏற்­பட்டு வந்­துள்­ளது.

சம்­ப­வத்­தன்று கரூர் அருகே உள்ள குல­தெய்வ கோவி­லுக்கு சாமி கும்­பிட வரு­மாறு ஜெனீ­பரை அசோக்­குமார் அழைத்­துள்ளார்.

அதற்கு ஜெனீபர் மறுத்த நிலையில் இரு­வ­ருக்கும் இடையே மீண்டும் தக­ராறு ஏற்­பட்­டுள்­ளது.

இந்­த­நி­லையில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை காலை அசோக்­குமார் எழுந்து பார்த்­துள்ளார். அப்­போது வீட்டின் ஒரு அறையில் ஜெனீர்பர் தூக்­கிட்டு தற்­கொலை செய்­துள்ளார்.

இத­னைக்­கண்டு அதிர்ச்­சி­ய­டைந்த அசோக் குமார் இது­கு­றித்து அவர் மொடக்­கு­றிச்சி பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

தகவல் கிடைத் ததும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜெனீப ரின் உடலை மீட்டு பரிசோ தனைக்கு அனுப்பினர். பின்னர் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குற்றவாளிகளை தண்டிப்பது அரசாங்கத்தின் கடமையாகும்…!!
Next post இலங்கை வரும் சுஷ்மா – விக்னேஸ்வரன், சம்பந்தனுடனும் சந்திப்பு…!!