இலங்கையில் செய்யித் அல் ஹூஸைன்…!!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செய்யித் ராத் அல் ஹூஸைன் சற்றுமுன்னர் இலங்கையை வந்தடைந்தார்.
இன்று இலங்கையை வந்தடைந்துள்ள மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செய்யித் ராத் அல் ஹூஸைன் எதிர்வரும் 10ம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இலங்கை அரசாங்கம் விடுத்த அழைப்பை ஏற்று அவர் இன்று இலங்கை வருகை தந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
செய்யித் ராத் அல் ஹூஸைனின் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அரச தலைவர்கள் பலருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.
அத்துடன் நாளை மற்றும் நாளை மறுதினம் அவர் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இதேவேளை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்யித் ராத் அல் ஹுஸைனின் யாழ். விஜயத்தின் போது காணாமல் போனவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர்.
நாளை ஞாயிற்றுக்கிழமை (07) இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
Average Rating