செங்கம்பள வரவேற்பால் சர்ச்சையில் சிக்கிய எகிப்து ஜனாதிபதி..!!

Read Time:1 Minute, 41 Second

gfhghgஎகிப்து நாட்டு ஜனாதிபதி அப்துல் பத்தாஹ் அல் சிசி கெய்ரோவின் புறநகர் பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்டார். அப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள இலவச வீடுகளை திறந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்குவதற்காகவே இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விழாவை ஏற்பாடு செய்திருந்த அமைப்பாளர்கள் ஜனாதிபதி புறப்படும் பகுதியில் இருந்து விழா மேடை வரை 3 மைல் தூரம் சிவப்பு கம்பளம் விரித்து அவரை வரவேற்றுள்ளனர்.இச்சம்பவம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எகிப்து நாட்டு ஊடக நிறுவனங்கள் மத்தியில் இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த நாட்டின் முக்கிய இராணுவ அதிகாரி, இது சிறப்பான அனுபவம் என்றும் எகிப்தியர்களால் எந்தவித விழாவினையும் திறம்பட நடத்த முடியும் என நிரூபித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

எகிப்தில் மொத்த சனத்தொகையில் 25 சதவீதத்தினர் வறுமை கோட்டின் கீழ் நிலையில் இருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குண்டூரில் மாணவி குளிப்பதை படம் எடுத்த மாணவர் கைது..!!
Next post சிறுவனை கொலை செய்த சந்தேகநபர் தற்கொலை..!!