ஓமலூரில் காதலி வீட்டில் சிறை வைக்கப்பட்டதால் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ளது கட்டிகாரனூர். இந்த பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் கருப்பண்ணன் (வயது 25). இவர் சேலம் அரசு கல்லூரியில் படித்து வந்தார். இவருக்கும் சேலத்தை சேர்ந்த மாணவி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. 2 பேரும் ஒரு வருடமாக தீவிரமாக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் மாணவியின் வீட்டுக்கு தெரிய வந்தது. அவர்கள் மகளை கண்டித்தனர். இருப்பினும் காதல் ஜோடியினர் தனிமை யில் சந்தித்து பேசி வந்தனர். இந்த விவரம் அறிந்த மாணவியின் பெற்றோர் மீண்டும் கண்டித்தனர். பிறகு மாணவியை வீட்டில் பூட்டி சிறை வைத்தனர். காதலி வீட்டில் சிறை வைக்கப்பட்ட சம்பவம் கருப்பண்ணனுக்கு தெரிய வந்தது. காதலியை பார்க்க முடியாமல் தவித்தார். இதனால் அவர் மனம் உடைந்தார். காதலியை சந்திக்க முடியாத ஏக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷம் குடித்தார். வீட்டில் மயங்கி கிடந்த அவரை பெற்றோர் மீட்டு ஓமலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் வீடு திரும்பினார். இந்த நிலையில் மாணவர் கருப் பண்ணன் மீண்டும் விஷம் குடித்தார். சிறிது நேரத் தில் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஓமலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ் பெக்டர் நஞ்சப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.