நுவரெலியாவில் தனியார் பேருந்து விபத்து..!!
தனியார் பேருந்து ஒன்று (23.02.2016) அன்று மாலை 2.30 மணியளவில விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர் ஒருவரும் பெண் ஒருவரும் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியா ஹாவாஎலிய பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியின் பாதுகாப்பு வேளியில் தனியார் பஸ் (23.02.2016) அன்று மாலை 2.30 மணியளவில் விபத்துக்கள்ளானதில் பாடசாலை மாணவர் ஒருவரும் பொது மகன் ஒருவரும் காயத்திற்குள்ளான நிலையில் நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த விபத்து தொடர்பாக தெரியவருவதாவது,
(23.02.2016) அன்று மாலை 2.30 மணியளவில் பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் தனியார் பேருந்து ஒன்று நுவரெலியா ஹாவாஎலிய பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியின் பாதுகாப்பு வேளியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்து காரணமாக பாடசாலையின் பாதுகாப்பு மதில் முற்றாக சேதமடைந்ததுடன் குறித்த பாடசாலையில் ஆரம்ப பிரிவில் ஆண்டு நான்கில் கல்வி கற்கும் எம்.சுகிர்தன் (வயது 9) சென் ஜோன்ஸ் கந்தப்பளை பகுதியை சேர்ந்த மாணவன் பலத்த காயத்திற்கு உள்ளானதுடன் அவருடன் புஸ்ஸல்லாவ பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் காயத்திற்குள்ளாகியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட இருவரையும் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மாணவனை உடனடியாக சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தியுள்ளதாகவும் தேவை ஏற்படும் பட்சத்தில் அவரை கண்டிக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெண் சிறிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன். சாரதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Average Rating