மனைவி பிரிந்து சென்றதால் 2 குழந்தைகளின் கழுத்தை அறுத்த கொடூர தந்தை கைது..!!
கேரள மாநிலம் பாலக்காடு கல்பாத்தி அருகே உள்ளது குன்னம்புழா. இந்த பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அய்யப்பன் (வயது 40). இவரது மனைவி சுமா (29). இவர்களுக்கு ஆதித்தியன் (7) என்ற மகனும், அர்ச்சனா (3) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமா பாலக்காடு போலீசில் புகார் செய்தார். அதில் தனது கணவர் அய்யப்பன் தனது விருப்பம் இல்லாமல் வலுக்கட்டாயமாக அடிக்கடி செக்ஸ் தொல்லை கொடுத்ததாகவும் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து கணவன்–மனைவி இருவரும் பிரிந்து விட்டனர். குழந்தைகள் தாய் சுமாவிடம் சென்றுவிட்டனர். நேற்று அய்யப்பன் பள்ளி சென்ற 2 குழந்தைகளையும் ஆட்டோவில் அழைத்துசென்றார். புதர்மறைவு அருகே சென்றபோது திடீரென ஆட்டோ கவிழ்ந்தது. லேசான காயத்துடன் அனைவரும் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
இந்நிலையில் அய்யப்பன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மகன் ஆதித்தியாவின் கழுத்தை அறுத்தார். இதில் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் பீறியிட்டது. இதைப்பார்த்த மகள் அர்ச்சனா அலறி சத்தம்போட்டார். இதையடுத்து மகள் அர்ச்சானவையும் கழுத்தை அறுத்தார்.
சத்தம்கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது குழந்தைகள் 2 பேரும் ரத்தவெள்ளத்தில் மயங்கி கிடந்தனர். அய்யப்பன் அங்கிருந்து தப்பினார்.
குழந்தைகளை மீட்ட பொதுமக்கள் இது குறித்து ஹேமாம்பிகை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் விரைந்து வந்து குழந்தைகளை மீட்டு திருச்சூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குழந்தைகள் உயிருக்கு போராடி வருகிறார்கள். அய்யப்பனை போலீசார் கைது செய்தனர். எனது செக்ஸ் தொல்லை தாங்காமல் என்மீது போலீசில் கற்பழிப்பு புகார் கூறி வீட்டை விட்டு மனைவி வெளியேறி விட்டார். இதனால் ஆத்திரத்தில் இருந்த நான் குழந்தைகளின் கழுத்தை அறுத்தேன் என்று கூறினார்.
Average Rating