கொலை ஒன்றுடன் தொடர்புடைய மூவருக்கு மரணதண்டனை..!!
Read Time:59 Second
கொலை ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவருக்கு எம்பிலிப்பிட்டிய நீதிமன்றம் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
இந்த கொலை கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளது.
எம்பிலிப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செவனகல பிரதேசத்தில் 32 வயதான நபர் ஒருவரே படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த படுகொலையுடன் சம்பந்தப்பட்டதாக கருதப்பட்ட மூவருக்கே நேற்று எம்பிலிப்பிட்டிய நீதிபதி மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
இதேவேளை, 32,36 மற்றும் 29 வயதுடைய குறித்த சந்தேகநபர்கள் செவனகல மற்றும் ஹிக்கடுவை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating