புனேயில் இருந்து சென்னை வந்த மருத்துவ கல்லூரி மாணவி மாயம் போலீஸ் விசாரணை…!!
திருவள்ளூர் அருகே உள்ள காரனோடை முனிவேல் நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் எலக்டிரிக்கல் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
இவரது மகள் சம்சினி (வயது 18), புனேயில் உள்ள மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். பெற்றோரை பார்க்க இவர் நேற்று முன்தினம் விமானத்தில் சென்னை வந்தார்.
பின்னர் அவர் வடமதுரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். மாலையில் கடை வீதிக்கு பொருட்கள் வாங்க சென்ற சம்சினி பின்னர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. பெற்றோர் வீட்டுக்கும் செல்லவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் சம்சினியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம், சப்–இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி வழக்குப்பதிவு செய்து மருத்துவ மாணவி சம்சினியை யாராவது கடத்தி சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
Average Rating