மன்னார் மோதலில் படைவீரர் உயிரிழப்பு
Read Time:56 Second
மன்னாரில் இடம்பெற்ற மோதல்களில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. பள்ளங்குளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 7.40 மணியளிவில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பெரியதம்பனையில் சனிக்கிழமை விடுதலைப் புலிகள் வைத்த மிதிவெடியில் சிக்கி 2 படையினர் படுகாயமடைந்துள்ளனர். விளாத்திக்குளம் பகுதியில் சனிக்கிழமை இடம்பெற்ற மோதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.