போடி அருகே குழந்தையை கிணற்றில் வீசி கொன்று இளம்பெண் தற்கொலை…!!

Read Time:1 Minute, 48 Second

470792f5-942b-4bdc-85c8-29612d2c2ad4_S_secvpfதேனி மாவட்டம் போடி அருகே உள்ள பெருமாள்கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் செல்வம் (வயது30). தேனியில் மினி பஸ் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன் மகள் ராஜேஸ்வரிக்கும் திருமணம் ஆகி கோவர்த்தனி என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. ராஜேஸ்வரி கடந்த ஆண்டு திடீரென இறந்து விட்டார். குழந்தையை வளர்ப்பதற்காக 3 மாதங்களுக்கு முன் செல்வம் ராஜேஸ்வரியின் தங்கை பிரேமலதாவை 2–வது திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்த சில நாட்களிலேயே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அடிக்கடி சண்டை நடந்து வந்தது. நேற்றும் இதுபோல் பிரச்சினை ஏற்படவே வாழ்க்கையில் வெறுப்படைந்த பிரேமலதா தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

கணவர் வேலைக்கு சென்ற பின்னர் பிரேமலதா குழந்தை கோவர்த்தனியை அங்குள்ள தோட்டத்துக்கு தூக்கி சென்று கிணற்றில் வீசி கொன்று விட்டு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி அறிந்த தீயணைப்புத்துறையினர் அங்கு சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போடி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பனப்பாக்கம் அருகே கோஷ்டி மோதலில் வாலிபர் கொலை…!!
Next post சங்கரன்கோவில் அருகே தமிழக முன்னாள் அமைச்சரின் பேரன் கிணற்றில் விழுந்து பலி…!!