காதலிக்காவிட்டால் பெற்றோரை கொன்றுவிடுவேன்: ஒருதலையாக காதலித்து மிரட்டியதால் இளம்பெண் தற்கொலை..!!
திருவண்ணாமலை அடுத்த சோமாசிப்பாடி வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் காசி. இவருடைய மகள் துர்கா (வயது 19). இவரை விஜி என்ற வாலிபர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். துர்கா அந்த வாலிபரை காதலிக் கவில்லை. தன்னை காதலிக்கவில்லை என்றால் உன்னுடைய பெற்றோரை கொன்றுவிடுவேன் என துர்காவை விஜி மிரட்டியுள்ளார்.
இதனால் மனமுடைந்த துர்கா கடந்த 20–ந் தேதி தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் உடல்கருகிய அவரை சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
அவருடைய உடல் நேற்று மாலை சோமாசிப்பாடிக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது திருவண்ணாமலை– திண்டிவனம் ரோட்டில் துர்காவின் பிணத்தை ஏற்றி வந்த ஆம்புலன்சை நிறுத்தி உறவினர்கள் சாலைமறியல் செய்தனர்.
தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை துணை சூப்பிரண்டு சரவணக்குமார் மற்றும் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விஜியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும் என்று கேரிக்கை வைத்தனர்.
உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
Average Rating