சிறுமியை கட்டிப்பிடித்த இளைஞன் கைது! யாழில் சம்பவம்..!!
Read Time:1 Minute, 18 Second
யாழ்.சுண்டுக்குளி பகுதியில் சந்தனம் வீதி யை சேர்ந்த 5வயதுச் சிறுமியை கட்டிப்பிடித்து முத்தமிட்டவர் என்ற சந்தேகத்தில் 26வயதுடைய இளைஞன் யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவது
நேற்று மாலை வீட்டு முத்தத்தில் விளையாடிக் கொண்டிருந்த 5வயதுச் சிறுமியை வெளியே அழைத்துச் சென்று குறித்த இளைஞனான தவராசா ஜபேஸ்கரா அச்சிறுமியை கட்டிப்பிடித்து முத்தமிட்டார். உடனே அச்சிறுமி அதனை தாயிடம் வந்து கூறவே உடனே தாய் பொலிஸ் நிலையத்தில் இரவு 7மணியளவில் முறைப்பாடொன்றை பதிவு செய்தார். அதன்படி குறித்த பகுதியில் வசிக்கும் 26வயதுடைய இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating