சீர்காழியில் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகனை கொன்ற தாய்..!!

Read Time:4 Minute, 10 Second

cc9efa7b-7746-41bd-9b83-0066616330de_S_secvpfநாகை மாவட்டம் சீர்காழி அகர திருக்கோலக்கா பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி லதா. சித்தாள் வேலைக்கு சென்று வந்தார்.

இவர்களது மகன் மணிவாசகன் (20). மன நலம் பாதித்தவர். இவர் சீர்காழி நேரு காலனி பகுதியில் ஒரு வீட்டின் திண்ணையில் பிணமாக கிடந்தார்.

அவரது உடலில் இருந்து பூச்சி மருந்து வாசனை வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் சந்தேகம் அடைந்தனர். இது குறித்து சீர்காழி போலீசில் புகார் செய்தனர்.

இன்ஸ்பெக்டர் அழகு துரை, சப்–இன்ஸ்பெக்டர் முருகவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில் லதா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகனை விஷம் கொடுத்து கொன்றது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து சந்தேக மரணம் என முதலில் வழக்கு பதிவு செய்த போலீசார் பின்னர் கொலை வழக்காக மாற்றினார்கள்.

சீர்காழி அட்டக்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். கட்டிட தொழிலாளி. இவருக்கும் லதாவுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இந்த விவரம் லதாவின் கணவர் வெங்கடேசனுக்கு தெரிய வந்தது.

அவர் மனைவியை கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு உருவானது. இந்த நிலையில் வெங்கடேசன் விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் அவதிப்பட்டார். இதனை தொடர்ந்து மன நலம் பாதிக்கப்பட்ட தனது மகனை அழைத்து கொண்டு சீர்காழி ரெயில் நிலையம் பகுதியில் வீடு எடுத்து கள்ளக்காதலன் ராஜ் குமாருடன் குடும்பம் நடத்தி வந்தார்.

சில நாட்களில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. மகனை ஏன் அழைத்து வந்தாய்? உனது கணவரிடம் விட்டு விட்டு வர வேண்டியது தானே என ராஜ் குமார் சத்தம் போட்டார்.

இதில் ஏற்பட்ட தகராறில் லதாவை அரிவாளால் வெட்டினார். இது தொடர்பாக சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜ் குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

அதன் பின்னரும் இருவருக்கும் மீண்டும் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் சீர்காழி பூந்தோட்டம் பகுதியில் வீடு எடுத்து தங்கினார்கள். இந்த நிலையில் லதாவின் மகன் மணிவாசகன் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்தது.

எனவே அவரை கொலை செய்ய இருவரும் முடிவு செய்தனர். நேற்று கத்தரி பயிருக்கு அடிக்கும் பூச்சி கொல்லி மருந்தை ராஜ்குமார் வாங்கி வந்தார்.

அதனை பிஸ்கட்டில் கலந்து லதா தனது மகனுக்கு கொடுத்தார். இதில் மணி வாசகன் மயங்கி விழுந்தார். அவரை ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றார். நேரு காலனி பகுதியில் சென்ற போது மணிவாசகன் இறந்து விட்டதால் அங்குள்ள திண்ணையில் பிணத்தை போட்டு சென்றது போலீஸ விசாரணையில் தெரிய வந்தது.

லதா அவரது கள்ளக்காதலன் ராஜ் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகனை தாய் கொன்ற சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பவானி ஆற்றுப்பாலத்திலிருந்து கீழே குதித்து முதியவர் தற்கொலை: போலீசார் விசாரணை…!!
Next post சிகரெட் புகைப்பதை நிறுத்துமாறு கோரப்பட்டதால் ஆத்திரமடைந்து பஸ்ஸை கடத்திச் சென்ற பெண்…!!