மனைவியின் முகத்தில் அமிலத்தை வீசித் தாக்குதல் நடத்திய கணவன்…!!
வீட்டில் அற்பமான விடயங்கள் தொடர் பில் இடம்பெற்ற வாக்குவாதமொன்றையடுத்து கணவர் ஒருவர் தனது மனைவியின் முகத்தில் அமிலத்தை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பங்களாதேஷில் கடந்த சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
பிரஹ்மன்பாரியா மாவட்டத்தைச் சேர்ந்த தானியா பர்வீன் (25 வயது) என்ற பெண்ணே இவ்வாறு தனது கணவரான நஸ்ருல்லால் அமில வீச்சுத் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
சம்பவ தினம் இரவு 8 மணியளவில் தொழுகையில் ஈடுபட அவர் தயாரான போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனால் அவரது முகத்திலும் உடலின் மேல் பகுதியிலும் கடும் எரிகாயங்கள் ஏற்பட்டுள்ளன.
வலி தாங்காமல் அவர் கூச்சலிடுவதை கேட்ட அயலவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக டாக்கா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பங்களாதேஷில் 1999 ஆம் ஆண்டுக் கும் கடந்த ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் 3625 பேர் அமில வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பி டத்தக்கது.
Average Rating