புதுவண்ணாரப்பேட்டையில் கண்டக்டரை தாக்கிய 2 பேர் கைது…!!
Read Time:45 Second
பிராட்வேயில் இருந்து சுங்கச்சாவடி நோக்கி நேற்று இரவு மாநகர பஸ் சென்றது. கண்டக்டராக சங்கரன் இருந்தார்.
புதுவண்ணாரப்பேட்டை அருகே வந்த போது பஸ்சில் ஏறிய 2 வாலிபர்கள் கண்டக்டர் சங்கரனிடம் ரகளையில் ஈடுபட்டு தாக்கினர். இது குறித்து புது வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. விசாரணையில் கண்டக்டரை தாக்கியது திருவொற்றியூரை சேர்ந்த சரவணன், விக்னேஷ் என்பது தெரிந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Average Rating