வால்பாறை எஸ்டேட்டில் கண்காணிப்பு காமிராவில் பேய் உருவம் பதிவானதாக வதந்தி…!!
வால்பாறை அருகே உள்ள கருமலை எஸ்டேட் பகுதியில் வன விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்கு வனத்துறை மூலம் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பேய்களின் உருவம் பதிவானதாகவும் அதனால் கருமலை எஸ்டேட் பகுதியில் பரபரப்பு நிலவுவதாகவும் கூறி வாட்ஸ்–அப்பில் செய்தியும் 2 புகைப்படங்களும் வெளியானது.
இது குறித்து தெரியவந்ததும் அந்த பகுதிமக்கள் மத்தியில் பரபரப்பு நிலவியது. இதனால் மாலை நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறாமல் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகிறார்கள்.
இந்தநிலையில் இந்த சம்பம் பற்றி வால்பாறை வனச்சரக வனத்துறையினரிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:–
கருமலை எஸ்டேட் பகுதியில் வனவிலங்குகளை கண்காணிப்பதற்காக காமிரா ஏதும் பொருத்தப்படவில்லை. இது வதந்தி என்றும், பொதுமக்கள் இதை நம்ப வேண்டாம் என்று வனத்துறையினர் கேட்டுக்கொண்டனர்.
இந்த வாட்ஸ்–அப் புகைப்படம் மற்றும் செய்தியால் வால்பாறை கருமலை எஸ்டேட் பகுதியிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Average Rating