விழுப்புரம் ஆசிரமத்தில் இருந்து தப்பிய 3 இளம்பெண்கள் கோவை ரெயில் நிலையத்தில் மீட்பு…!!
Read Time:1 Minute, 17 Second
கோவை ரெயில் நிலையம் முன்பு இன்று அதிகாலை 3 மணியளவில் இளம்பெண்கள் 3 பேர் எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்தனர்.
அப்போது அந்த பகுதியில் ரோந்து சென்ற ரேஸ்கோர்ஸ் போலீசார் இளம்பெண்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இளங்கோவனின் மகள்கள் விஜயலட்சுமி வயது (16), சுபாஷினி (16) மற்றும் சுரேஷ் என்பவரின் மகள் ஜெய்ஸ்ரீ (17) என்பது தெரியவந்தது.
இவர்கள் 3 பேரும் அங்குள்ள ஆசிரமத்தில் தங்கி படித்து வந்ததும், படிக்க பிடிக்காமல் அங்கிருந்து தப்பி கோவைக்கு ரெயிலில் வந்ததும் தெரிய வருகிறது.
கோவைக்கு வேலை தேடி வந்தபோது போலீசார் அவர்களை மீட்டனர். பின்னர் அவர்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
மாணவிகள் குறித்து அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கோவை விரைந்துள்ளனர்.
Average Rating