புழல் அருகே பள்ளி மாணவன் மர்ம சாவு…!!
புழல் புத்தகரம் வெங்கட சாய் நகரை சேர்ந்தவர் பாஸ்கர். கூலி தொழிலாளி. இவரது மகன் சஞ்சய்சரண் (7). 2–ம் வகுப்பு மாணவன். இவர்களது வீடு 2–வது மாடியில் உள்ளது.
நேற்று மாலை சஞ்சய் சரண் வீட்டில் விளையாடி கொண்டு இருந்தான். அப்போது பாஸ்கர் வீட்டில் உள்ள குப்பைகளை வெளியே உள்ள குப்பை தொட்டியில் போட்டு விட்டு வரும்படி சஞ்சய் சரணிடம் கூறினார்.
உடனே சஞ்சய்சரண் குப்பையை எடுத்துக்கொண்டு வெளியே சென்றான். பின்னர் அவன் வீடு திரும்பவில்லை. இதனால் பாஸ்கர் சஞ்சய் சரணை தேடினார். அப்போது வீட்டின் அருகே உள்ள ரோட்டில் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் சஞ்சய் சரண் கிடந்தான்.
உடனே அவனை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சஞ்சய்சரண் இறந்தான். இதுகுறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். சஞ்சய் சரண் சாலையை கடந்த போது மோட்டார் சைக்கிள் மோதி இறந்தாரா? அல்லது படியில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Average Rating