ஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில் விபசாரம்: 08 பேர் கைது..!!
Read Time:1 Minute, 6 Second
வெள்ளவத்தையில் ஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதியொன்றை நேற்று இரவ சுற்றிவளைத்த பொலிஸார், அங்கிருந்த 7 பெண்கள் உட்பட 8 பேரை கைது செய்துள்ளனர்.
தாய்லாந்துப் பெண்கள் இருவர் உட்பட 5 இலங்கைப் பெண்கள் மற்றும் குறித்த நிலையத்தின் முகாமையாளரான ஆணொருவரையுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இலங்கைப் பெண்கள்30, 24, 21 மற்றும் 25 வயதானவர்கள் எனவும் இவர்கள் வாரியபொல, பாதுக்க, நீர்கொழும்பு மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating