சீனாவில் காட்டுத்தீயில் சிக்கி வனத்துறை அதிகாரிகள் 2 பேர் பலி…!!
சீனாவில் பற்றி எரிந்த காட்டுத் தீயில் சிக்கி இரண்டு வனத்துறை அதிகாரிகள் உடல் கருகி உயிரிழந்தனர்.
சாங்டாங் மாகாணம், கிங்டாவ் மலைப்பகுதியில் வசிக்கும் மக்கள் சமீபத்தில் தங்கள் முன்னோர்களின் கல்லறைகளுக்குச் சென்று அவர்களை கவுரவிக்கும் பாரம்பரிய நிகழ்ச்சியை நடத்தினர். அப்போது, போலி ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நறுமணப் பொருட்களை எரித்து தூபம் காட்டும்போது திடீரென தீப்பிடித்துள்ளது.
பின்னர் அந்த தீ வனப்பகுதியில் பரவியது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சுமார் 100 பேர் விரைந்து வந்து இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதில், வனத்துறையைச் சேர்ந்த 2 ரேஞ்சர்கள் உடல் கருகி இறந்தனர். மற்றொருவர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீப்பிடிக்க காரணமான இரண்டு பேரை பிடித்து விசாரித்து வருவதாக உள்ளூர் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
Average Rating