தவறி வந்த அழைப்பினால் மூன்று கொடூர காமுகர்களின் பாலியல் வலையில் சிக்கிய பெண்..!!
கெகிராவ – கனேவல்பொல பிரதேசத்தில் 37 வயதான பெண் ஒருவர் காமுகர்களினால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் கைப்பேசிக்கு தவறுதலாக வந்துள்ள அழைப்பு ஒன்றை தொடர்ந்து நபரொருவருக்கிடையில் தொடர்பு ஏற்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.
தொடர்பை மேற்கொண்டவருடன் கொழும்பு நோக்கி குறித்த பெண் பேருந்தில் வந்து இறங்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து குறித்த நபர், தனது முச்சக்கர வண்டியில் குறித்த பெண்ணை வர்த்தக நிலைய அறை ஒன்றிற்கு அழைத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பின்னர் இருவருக்கிடையிலுமான தொடர்புகள் அதிகரித்துள்ளதுடன், இரவு உணவு எடுத்து வருவதாக சென்ற குறித்த நபர், மேலும் 3 சந்தேக நபர்களை அழைத்து வந்து குறித்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
23 மற்றும் 27 வயதுக்குட்பட்டவர்களே குறித்த சந்தேக நபர்கள் என காவற்துறை தெரிவித்தது.
காவற்துறை இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
Average Rating