பாரீஸ் தாக்குதல்: பேர் விடுதலை…!!
Read Time:1 Minute, 5 Second
பாரீஸ் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பெல்ஜியத்தில் அண்மையில் கைது செய்யப்பட்ட 3 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பாரீஸில் கடந்த நவம்பர் மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 பேர் மரணமடைந்தனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக பொலிசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக,பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்ஸில் மூன்று நபர்களை பொலிசார் கடந்த புதன்கிழமை கைது செய்தனர்.
தாக்குதல் சம்பவம் குறித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட நீதிபதி, அவர்களை விடுவிக்க உத்தவிட்டார். அவர்கள் மீது எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை என்றும் நீதிபதி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Average Rating