சிங்கமாக மாறிய நாய்: வைரலாகும் புகைப்படம்…!!
ஜேர்மனியை சேர்ந்த பெண் புகைப்படக் கலைஞர் ஒருவர் தனது நாயை சிங்கமாக ஒப்பனை செய்து பதிவேற்றியுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
ஜேர்மனியை சேர்ந்த புகைப்படக் கலைஞரான ஜூலியா மேரி வெர்னெர் என்பவர் புகைப்படம் எடுப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கே நபர் ஒருவர் தனது உணவை சாப்பிட முயன்றது என்று கூறி பசியால் தவித்துக்கொண்டிருந்த நாயை அடித்துகொண்டிருந்துள்ளார்.
இந்த காட்சியை பார்த்து பரிதாபப்பட்ட அவர் நாயை தன்னுடம் ஜேர்மனிக்கு அழைத்து சென்றுள்ளார். Tschikko என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நாயை மிகவும் அன்பாக பார்த்துக்கொண்டார். இந்நிலையில் அந்த நாய்க்கு சிங்கத்தை போன்று ஒப்பனை செய்து புகைப்படம் எடுத்துள்ளார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் Tschikko பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, டென்மார்க் போன்ற நாடுகளுக்கு அழைத்து சென்று புகைப்படங்கள் எடுத்துள்ளார்.
இது தொடர்பாக வெர்னெர் கூறியதாவது, Tschikko வை பார்த்ததுமே பிடித்து விட்டது. பின்னர் நபர் ஒருவர் அதை கட்டையால் அடிக்க முயன்றதை பார்த்தேன். இதையடுத்து விலங்குகள் நல அமைப்புடன் சென்று நாயை மீட்டேன். அதன் காயங்கள் ஆறிய பிறகு உரிய அனுமதி வாங்கி ஜேர்மனிக்கு அழைத்து வந்தேன்.
எங்கு புகைப்படம் எடுக்க சென்றாலும் Tschikkoவை அழைத்து செல்வேன் என்று தெரிவித்துள்ளார். Tschikkoவை சிங்கம் போன்று ஒப்பனை செய்து அவர் எடுத்துள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Average Rating