கொக்காவிவில் விபத்து சாரதிகள் உள்ளிட்ட மூவர் படுகாயம்…!!
Read Time:1 Minute, 19 Second
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்காவில் 238 வது கிலோமீட்டர் பகுதியில் இன்றுகாலை 7.45 மணியளவில் இரண்டு முச்சக்கர வண்டிகள் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு முச்சக்கர வண்டிகளின் சாரதிகள் உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டியினை பின்னால் சென்ற முச்சக்கர வண்டி முந்திச்செல்லமுற்ப்பட்டபோதே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்
இந்த விபத்து சம்பவத்தில் இரண்டு முச்சக்கர வண்டிகளின் சாரதிகள் உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலதிக விசாரனைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்
Average Rating