இருவரை கத்தியால் சரமாரியாக தாக்கிய நபர்கள் யார்?: பொலிசார் தீவிர விசாரணை…!!
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சாலையின் மையத்தில் இரண்டு நபர்களை கத்தியால் சரமாரியாக தாக்கிய 3 நபர்களை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சுவிஸின் பேசல் மாகாணத்தில் உள்ள Riehenring என்ற பகுதியில் நேற்று பிற்பகல் வேளையில் தகராறு ஏற்பட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலை பெற்ற பொலிசார் ரோந்து வாகனங்களுடன் அப்பகுதிக்கு சென்றுள்ளனர்.
அங்கு வெட்டுக்காயங்களுடன் இருந்த நபர் ஒருவரை கைது செய்தனர்.
பின்னர், சில நிமிங்களாக தொடர்ந்த தேடுதல் வேட்டையில் Wiesbaden என்ற பகுதியில் மற்றொரு நபரை பொலிசார் கைது செய்தனர்.
இந்த நபருக்கும் கத்தியால் தாக்கப்பட்ட வெட்டுக்காயங்கள் இருந்துள்ளது.
இருவரிடமும் விசாரணை நடத்தியபோது அவர்கள் 30 மற்றும் 39 வயது நிரம்பியவர்கள் என்றும் அல்ஜீரியா நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளனர்.
இவர்கள் இருவரையும் மர்ம நபர்கள் மூவர் தாக்கியதாக கூறப்படுகிறது. ஆனால், தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
இருவரையும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்த பொலிசார், தப்பியோடிய எஞ்சிய மூவரையும் பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Average Rating