பிரித்தானியாவில் சிறிய இளஞ்சிவப்பு மாத்திரை உட்கொண்ட இளம்பெண் உயிரிழப்பு! பொலிஸ் எச்சரிக்கை…!!
பிரித்தானியாவின் வட மேற்கு பகுதியில் உள்ள கிரேட்டர் மான்செஸ்டர் நகரில் நடந்த இரவு பார்ட்டியில், போதை மாத்திரை உட்கொண்ட இளம்பெண், விநோதமான விளைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிரேட்டர் மான்செஸ்டரின், டிராஃபோர்ட்டில் உள்ள விக்டோரியா வார்ஹவுஸில்(Victoria Warehouse in Trafford), Don’tLet Daddy Know என்னும் இரவு பார்ட்டி நடந்துள்ளது.
இதில். 5000 பேர் கலந்துகொண்டுள்ளனர், இந்த பார்ட்டியில் கலந்து கொண்ட குறித்த பெண், அங்கு பரிமாறப்பட்ட சிறிய இளஞ்சிவப்பு போதை மாத்திரையை உட்கொண்டுள்ளார்.
இதை உண்ட சிறிது நேரம் கழித்து, அந்த பெண்ணிற்கு விநோத விளைவு ஏற்பட்டுள்ளது, உடனே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில், அவர் உயிர் பிரிந்ததாக பொலிசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், அந்த பார்ட்டியில் கலந்து கொண்ட வேறு யாரேனும், அந்த மாத்திரையை உட்கொண்டிருந்தால், அவர்களை உடனே மருத்துவமனையை நாடும் படி பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.
குறித்த மாத்திரை உட்கொண்ட சில மணி நேரங்கள் கழித்தும், அது நாம் உடம்பிலே இருக்கும் எனவும். இதனால் நமது உடல் உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் பொலிசார் எச்சரித்துள்ளனர்.
Average Rating