பலாங்கொடையில் மண் சரிவு; பிக்கு ஒருவரை காணவில்லை..!!
Read Time:59 Second
பலாங்கொடை, பம்பஹின்ன நியதகல பிரதேசத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அப் பிரதேசத்தில் உள்ள பௌத்த வணக்கஸ்தலம் ஒன்று மண்ணில் புதையுண்டுள்ளது.
அத்துடன் அங்கு சேவையாற்றும் பெத்த பிக்கு ஒருவர் சம்பந்தமாக தகவல்கள் இல்லை. பலாங்கொடை பொலிஸார் இது தொடர்பில் தேடிப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த சில தினங்களாக அப்பிரதேசத்தில் பெய்த மழை காரணமாக இந்த மண்சரிவு இடம்பெற்றுள்ளது.
முன்னதாக அப்பிரதேசத்தில் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating