இதுதாங்க பாசம்- இறந்து போன எஜமானருக்காக காத்திருக்கும் நாய்…!!

Read Time:2 Minute, 14 Second

625.117.560.350.160.300.053.800.210.160.70 (2)ருமேனியா நாட்டில் இறந்து போன தன்னுடைய எஜமானரை காண்பதற்காக கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் வீட்டு வாசலிலேயே அமர்ந்து கொண்டிருக்கும் நாயை கண்டு அக்கிராம மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

ருமேனியாவின் தென்பகுதியில் உள்ள கிராமங்களில் ஒன்றான மாலு மேர் என்ற கிராமத்தில் இந்த அதிசய நிகழ்வு நடந்துள்ளது.

குறித்த வீட்டில் எஜமானரும், நாயும் வாழ்ந்து வந்துள்ளனர், எஜமான் இறந்து பின் அந்த வீடு பூட்டிய நிலையில் இருந்துள்ளது.

எஜமான் இறந்து ஐந்து ஆண்டுகள் கழிந்தும், நாய் சோகத்துடன் எஜமானுக்காக வீட்டு வாசலிலேயே காத்துக் கிடக்கின்றது.

வேறொரு இடத்தில் கொண்டு போய் விட்டாலும், சரியாக அதே வீட்டின் வாசல் முன்பு அமர்ந்துவிடுகிறது.

கடும் மழை, வெயில் என எந்த காலநிலையையும் பொருட்படுத்தாமல் அங்கேயே அமர்ந்திருக்கும் நாய்க்கு, அந்த வழியே செல்லும் நபர்கள் உணவளித்துவருகின்றனர்.

குறித்த நாயை அதன் எஜமான் தன்னுடனே வைத்து வளர்த்ததாகவும், இதனால் எஜமான் பற்றியும், நாயை பற்றியும் தங்களுக்கு எந்த தகவலும் தெரியாது என வீட்டின் அருகாமையில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அக்கிராம மேயர் Alexandru Dicu கூறுகையில், நாய் ஆக்ரோஷமான முறையில் இல்லை என்றாலும், யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்க மறுக்கிறது.

இது அந்த வீட்டின் எஜமானருக்கும், நாய்க்கும் இடையே நல்ல நேசம் இருந்துள்ளதை காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கனடாவில் வேகமாக பரவும் காட்டுத் தீ: வீடுகள் எரிந்து நாசம்…!!
Next post 12 வயதில் தாய்மை அடையும் சிறுமிகள்- உலகில் நடக்கும் கொடூரம்…!!