இந்தோனேசியாவில் கடலில் மிதந்த செக்ஸ் பொம்மை – தேவதை என எடுத்து வந்த மீனவர்…!!
இந்தோனேசியாவில் கடலில் மிதந்த ‘செக்ஸ்’ பொம்மையை தேவதை என கருதி மீனவர் எடுத்து வந்தார்.
இந்தோனேசியாவில் ஸ்லாவேசி மாகாணத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் பாங்கை தீவுகளில் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது கடலில் ஒரு அழகிய பெண் பொம்மை ஒன்று மிதந்து வந்தது.
அது மீனவரின் படகு அருகே வந்து ஒதுங்கியது. அதை பார்த்த மீனவர் தனக்கு தேவதை கிடைத்து விட்டதாக மகிழ்ச்சி அடைந்தார்.
பின்னர், அதை வீட்டுக்கு எடுத்து வந்து அதற்கு உடைகள் அணிவித்து அழகுபடுத்தினார். பார்ப்பதற்கு அச்சு அசலாக அப்பொம்மை அழகிய பெண்ணாகவே காட்சியளித்தது. அதே நேரம் அந்த பொம்மை மனிதர்கள் போன்று சிரிப்பது அழுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது. எனவே, இதை தேவதை என்று கிராம மக்கள் நம்பினர்.
எனவே, அந்த பொம்மையை சீராட்டி, பாராட்டி வந்தனர். இதற்கிடையே அதன் போட்டோக்களும், செயல்பாடுகளும் இணைய தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
அதையடுத்து அந்த கிராமத்துக்கு சென்ற போலீசார் மீனவரிடம் இருந்து அந்த பொம்மையை பறிமுதல் செய்தனர்.
பின்னர் ஆய்வு செய்த போது அது ஒரு செக்ஸ் பொம்மை என தெரியவந்தது. சிலிகான் உலோகத்தில் உருவாக்கப்பட்டு மனித சதை போன்று கொழ கொழப்பாக தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.
Average Rating