பிரசவத்திற்காக வந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட கட்டிலில் நடந்த சம்பவம்..!!
Read Time:1 Minute, 22 Second
பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண், சிகிச்சை அளிக்கப்படும் கட்டிலிலேயே குழந்தை பிரசவித்த சம்பவம் எம்பிலிபிட்டிய ஆதார மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
உருபொக்க பிரதேசத்தை சேர்ந்த இந்த பெண், பிரசவத்திற்காக அண்மையில் எம்பிலிபிட்டிய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன் போது நேற்றிரவு 1.00 மணியளவில் பிரசவத்திற்கு தயார் நிலையில் இருந்த போது அவருக்கு தேவையான வசதிகள் கிடைக்கவில்லை என தெரியவந்துள்ளது.
குறித்த நேரத்தில் மருத்துவர்கள், தாதிமார்கள் மற்றும் குடும்ப சுகாதார அதிகாரிகள் தேவைக்கேற்ப அங்கு இருக்கவில்லை என அந்த அறையில் உள்ள நோயாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் தனக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருந்த கட்டிலிலேயே குறித்த பெண், குழந்தையை பிரசவித்துள்ளார்.
Average Rating