இங்கிலாந்து கால்பந்து மைதானத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு – பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு..!!
இங்கிலாந்து மான்செஸ்டர் மாகாணத்தில் உள்ள மைதானத்தில் சோதனையின் போது வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள ஓல்ட் டிராப்போர்ட் என்ற மைதானத்தில் யூனைட்டட் , போர்ன்மவுத் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற இருந்தது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு போலீசார் சோதனை செய்தனர். அப்போது மைதானத்தில் மர்ம பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர். இது குறித்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர். அப்போது வெடிகுண்டு இருந்ததை உறுதி செய்தனர்.
அதனை தொடர்ந்து கால்பந்து போட்டு உடனடியாக ரத்து செய்யப்பட்டது. மேலும் மைதானத்தில் இருந்த பொதுமக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
வெடிகுண்டு வைத்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். போட்டியை சீர்குலைக்க தீவிரவாதிகளின் சதி திட்டமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன்றனர்.
மைதானத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating