சிறுத்தையின் தாக்குதலில் 6 பெண்கள் படுகாயம்…!!
Read Time:58 Second
நுவரெலியா மாவட்டம் கொட்டக்கலை, ஸ்டொனிகிளிப் தோட்டத்தில் வேலையாற்றிய ஆறு பெண் தொழிலாளர்கள், சிறுத்தையின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (22) பிற்பகல் 3.15 அளவில் இந்தப் பெண்களை சிறுத்தை தாக்கியுள்ளது.
சிறுத்தையின் தாக்குதலில் காயமடைந்த பெண்கள் கொட்டக்கலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போதே இந்தப் பெண்கள், சிறுத்தையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Average Rating