ஐந்துநாள் அயிட்டங்களை ஒரேவேளையில் தின்று தீர்த்தால் ரூ. 50 ஆயிரம் பரிசு: இங்கல்ல, இங்கிலாந்தில்…!!
இங்கிலாந்து நாட்டின் துர்ஹாம் நகரில் உள்ள பிரபல உணவகம் பத்தாயிரம் கேலரிகளை உள்ளடக்கிய சிக்கன் உணவுகளை ஒரேவேளையில் தின்று தீர்த்தால் 500 பவுண்டுகளை பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளது.
இங்கிலாந்து நாட்டின் துர்ஹாம் நகரில் உள்ள பிரபல உணவகம் பத்தாயிரம் கேலரிகளை உள்ளடக்கிய சிக்கன் உணவுகளை ஒரேவேளையில் தின்று தீர்த்தால் 500 பவுண்டுகளை பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளது.
இங்கிலாந்து நாட்டின் துர்ஹாம் நகரில் உள்ள டார்லிங்டன் உணவகத்தின் சமையல்கலைஞர்கள் அறிவித்துள்ள இந்த போட்டியில் ஐந்துநாட்களுக்கு ஒரு மனிதருக்கு தேவையான சிக்கன் உணவு வகைகள் இலவசமாக பரிமாறப்படும். இங்கிலாந்தின் சாப்பாட்டுராமன் என்றழைக்கப்படும் ஆடம் மோரன்(30) என்பவர் இந்த போட்டியில் சமீபத்தில் பங்கேற்றார்.
பாதிபோட்டியிலேயே மூச்சுத்திணறி அவர் ‘ஜகா வாங்கி’விட, அடுத்த போட்டியாளராக இந்த உணவகத்தின் சவாலை எதிர்கொண்டு, ஓசியிலேயே சிக்கன் வகைகளை ஒருகட்டு கட்டிவிட்டு பரிசுத்தொகையை பெறப்போகும் புரட்சியாளர் யார் என்பது தெரியவில்லை.
போட்டிக்கான ஒரே நிபந்தனை என்னவென்றால், பரிமாறப்பட்ட மொத்த அயிட்டங்களையும் ஒரேவேளையில், 45 நிமிடங்களுக்குள் தின்று தீர்த்துவிட வேண்டும்.
Average Rating