கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி…!!
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் தேன்மொழி (வயது 46). இவரது கணவர் சத்யமூர்த்தி ஏற்கனவே இறந்து விட்டார். தேன்மொழியின் மகன் வினோத் (28). மாற்றுத்திறனாளி. இவருக்கு அடுத்த மாதம் 8-ந் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி வினோத், தனது 3 சக்கர மோட்டார்சைக்கிளில் தாய் தேன்மொழியை அழைத்துக்கொண்டு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக கும்மிடிப்பூண்டியை அடுத்த ராமாபுரத்திற்கு சென்றார்.
கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையான சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது வினோத்தின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த தேன்மொழி சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தேன்மொழி நேற்றுமுன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating