சென்னை பாண்டிபஜார் பூவியாபாரி கொலையில் 7 பேர் சிக்கினர்..!!

Read Time:1 Minute, 32 Second

201605271447042262_flowe-dealer-murder-case-7-person-arrest-in-pondybazzar_SECVPFசென்னை பாண்டிபஜாரில் சொத்து தகராறு காரணமாக உறவினர்களே பூ வியாபாரியான பரமனை கொலை செய்துள்ளனர்.

சென்னை பாண்டிபஜார் வடக்கு உஸ்மான் ரோட்டில் பூக்கடை வைத்து நடத்தி வந்த பரமன் (32) நேற்று இரவு கொலை செய்யப்பட்டார்.

கடையில் பூவியாபாரம் செய்து கொண்டிருந்த போதே மர்ம நபர்கள் அவரை வெட்டி சாய்த்தனர். ரத்த வெள்ளத்தில் அவரது உயிர் பிரிந்தது.

இதுபற்றி பாண்டிபஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது பரமன் கொலையில் துப்பு துலங்கியது.

சொத்து தகராறு வியாபாரம் செய்வதில் ஏற்பட்ட விரோதம் காரணமாக உறவினர்களே அவரை தீர்த்துக் கட்டி இருப்பது அம்பலமானது.

இது தொடர்பாக பரமனின் மாமா அய்யனார் அவரது மகன் முருகன் மற்றும் கார்த்திக், மணி, சரவணன், குட்டி, வினோத் ஆகிய 7 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். இவர்கள் இருக்கும் இடம் தெரிந்து விட்டதாகவும் கொலையாளிகளை இன்று மாலைக்குள் கைது செய்து விடுவோம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கைக்கு வருகிறது அதிவேக இணைய 5G தொழில்நுட்பம்…!!
Next post பாம்பு கடித்ததால் கோமா நிலை மூளைச்சாவு அடைந்த குழந்தை உயிர் பிழைத்தது…!!