விபத்தில் மூளை சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்..!!
காஞ்சிக்கோவில் அருகே உள்ள எல்லீஸ் பேட்டையை சேர்ந்தவர் மாதேஷ். இவரது மகள் பிரவீனா (வயது 15). பிளஸ் 1 படித்து வந்தார்.
கடந்த 13–ந்தேதி பிரவீனா தனது வீட்டின் அருகே உள்ள மளிகை கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வரும் போது வாகனம் மோதி படுகாயம் அடைந்தார்.
.இதில் தலையில் தலையில் பலத்த காயம் அடைந்த பிரவீனாவுக்கு மூளை சாவு ஏற்பட்டது. அவர் கோவையில் உள்ள ஒருதனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் கடந்த 26–ந்தேதி அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த நிலையில் மூளை சாவு ஏற்பட்டு இறந்த பிரவீனாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் ஒப்பு கொண்டனர்.
இதன்படி அவரது 2 கண்கள், 2 சிறுநீரகம், இதயம், மற்றும் ஈரல் ஆகியவை அகற்றப்பட்டு உடனடியாக 6 பேருக்கு பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இது பற்றி பிரவீனாவின் பெற்றோர் கூறும் போது, சிறுவயதிலேயே எங்களது மகள் பிரவீனா விபத்தினால் மூளை சர்வு ஏற்பட்டு இறந்தது எங்களுக்கு அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் உள்ளது.
இருப்பினும் அவளது உடல் உறுப்புகள் மற்றவர்கள் உயிர் வாழ உதவும் என்று டாக்டர்கள் கூறியதால் எங்களது மகளின் கண்கள், சிறுநீரகம், இதயம், ஈரல் ஆகியவற்றை தானமாக கொடுக்க முடிவு செய்தோம்.
எங்களது மகளின் உடல் உறுப்புகள் மூலம் 6 பேருக்கு மறுவாழ்வு அளித்து உள்ளது எங்களுக்கு சந்தோசமாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Average Rating