எழும்பூரில் 100 ரூபாய் தகராறில் வாலிபர் அடித்துக் கொலை: நண்பர் கைது…!!

Read Time:2 Minute, 1 Second

201605301416528175_money-dispute-youth-man-murder-friend-arrest-in-egmore_SECVPFசென்னை புதுப்பேட்டை ஏகப்பன் தெருவைச் சேர்ந்தவர் பாபு என்கிற அப்துல் ரகுமான் (47). திருமணமாகவில்லை.

இவரது ஒரு கால் செயல்படாததால் ஸ்டிக் உதவியுடன் நடப்பார். இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இவரது நண்பர் கிளமெண்ட். செல்போன் கடை நடத்தி வருகிறார்.

நேற்று பகலில் பாபுவும், கிளமெண்ட்டும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பாபுவின் 100 ரூபாயை காணவில்லை. அதை கிளமெண்ட் எடுத்ததாக சந்தேகப்பட்டு அவரிடம் பாபு கேட்டார். ஆனால் கிளமெண்ட் நான் எடுக்கவில்லை என்று கூறி விட்டார்.

பின்னர் நேற்று இரவு 10 மணி அளவில் புதுப்பேட்டை ஏகப்பன் தெருவில் உள்ள ஓட்டல் முன்பு பாபுவும், கிளமெண்ட்டும் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது கிளமெண்ட் 100 ரூபாயை தான் எடுத்ததாக சந்தேகப்பட்ட பாபுவிடம் தகராறு செய்தார். தகராறு முற்றியதால் பாபு தனது ஸ்டிக்கால் கிளமெண்டை தாக்கினார்.

இதைத்தொடர்ந்து கிளமெண்ட் பாபுவின் கையில் இருந்த ஸ்டிக்கை பறித்து அவரை சரமாரியாக தாக்கினார்.

இதில் படுகாயம் அடைந்த பாபுவை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பாபு பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபு வழக்குபதிவு செய்து பாபுவின் நண்பர் கிளமெண்டை கைது செய்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சந்தவாசல் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு…!!
Next post காலைக்கடன் கழித்துக்கொண்டிருந்த நபரின் ஆணுறுப்பை கழிவறைத்தொட்டிக்கு ஊடாக வந்து கடித்த மலைப்பாம்பு..!!