அமெரிக்காவில் 13 வயது மாணவனால் கர்ப்பமாகிய டீச்சர் மீது வழக்கு பதிவு..!!
Read Time:1 Minute, 21 Second
அமெரிக்காவில் 13 வயது மாணவனால் கர்ப்பமாகிய பள்ளி ஆசிரியைக்கு குழந்தை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஸ்டொவல்லா நடுநிலைபள்ளியில் ஆங்கில ஆசிரியையாக அலெக்சாண்டிரியா வேரா (24) பணியாற்றி வருகிறார். அவரது வகுப்பில் 8-ம் வகுப்பு பயின்று வந்த மாணவனுடன் உடலுறவு கொண்டதால் கர்ப்பமானதாக தெரிகிறது. இது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில் அவர் கர்ப்பத்தை கலைத்துள்ளார்.
இது குறித்து டெக்சாஸ் மாகாண போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் மீது குழந்தை பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் பள்ளியில் விசாரித்த போது அலெக்சாண்டிரியா வேரா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை மாணவர்கள் தெரிவித்துள்ளனர்
Average Rating