ஆஸ்திரேலியாவில் கடலில் குளித்தவர் காலை துண்டித்து சென்ற சுறா…!!
Read Time:59 Second
ஆஸ்திரேலியாவில் பெர்த் அருகே உள்ள பால்கன் கடலில் பென் ஜேரிங் (வயது 29) என்பவர் குளித்துக் கொண்டிருந்தார்.
இந்த பகுதி ஆளைக் கொல்லும் ராட்சத சுறாக்கள் நடமாடும் இடமாகும். அவர் குளித்து கொண்டிருந்த போது சுறா ஒன்று அவரது காலை கடித்தது. அதில் இருந்து மீண்டு அவர் அவர் போராடினார். ஆனால் முழங்காலுக்கு கீழே அவரது காலை துண்டித்து எடுத்து சென்றுவிட்டது.
கால் துண்டிக்கப்பட்ட நிலையில் அவர் மயங்கினார். ரத்தம் அதிக அளவில் வெளியேறியது. அப்போது அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Average Rating