யு.எஸ்.: விடாமல் அழுத பிறந்து 4 நாட்களே ஆன குழந்தையை கொன்ற தாய்…!!

Read Time:1 Minute, 53 Second

07-1465295178-baby-cry3-600அமெரிக்காவில் தொடர்ந்து அழுத பச்சிளம் குழந்தையை அதன் தாய் கொலை செய்த கொடூரம் நடந்துள்ளது. அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் உள்ள அலெக்சாண்டர் கவுன்ட்டியை சேர்ந்தவர் அய்ஷியா மேரி(22). அவருக்கு கடந்த மாதம் 20ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கடந்த 23ம் தேதி இரவு குழந்தை தொடர்ந்து அழுதுக் கொண்டே இருந்துள்ளது.

சமாதானம் செய்தும் குழந்தை அழுகையை நிறுத்தவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மேரி குழந்தை தனது நெஞ்சோடு இறுக்கி அணைத்து மூச்சு திணறடிக்க வைத்து கொலை செய்தார். மறுநாள் காலை இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தையின் மூக்கு மற்றும் வாயைச் சுற்றி காயமாக இருந்தது என்று போலீஸ் அதிகாரி கிறிஸ் பிரவுன் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மேரியை கைது செய்தனர். எதிர்பாராவிதமாக குழந்தையை கொலை செய்ததாகவும், தனது மகனை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் மேரி போலீசாரிடம் தெரிவித்தார். எத்தனையோ பேர் குழந்தை இல்லாமல் ஏங்கும்போது மேரி இப்படி செய்துவிட்டாரே என்று அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆட்டுக்கு இலை பறிக்க சென்ற 10 வயது சிறுமி தெருநாய்கள் கடித்துக் குதறியதில் பலி…!!
Next post ஆம்புலன்சில் திருமணம்!… விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை மணந்த காதலன்…!!