ஈராக்கில் நடைபெற்ற இரட்டை குண்டு வெடிப்பில் 20 பேர் பலி- 70 பேர் காயம்…!!
Read Time:1 Minute, 9 Second
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இதில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாக்தாத்தின் கிழக்கு மாவட்டமான அல்-ஜிடிடா மாவட்டத்தில் முதல் தாக்குதல் நடைபெற்றது. மக்கள் அதிகமாக கூடும் வணிகத் தெருவில் இந்த தாக்குதல் நடந்தது. இதில் குறைந்தது 8 பேர் பலியானார்கள். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் என்று போலீசார் கூறினர்.
மற்றொரு தாக்குதல் பாக்தாத்தின் வடக்குப் பகுதியில் நடைபெற்றது. இதில் 12 பேர் பலியானார்கள். கடந்த மாதம் 17-ந்தேதி பாக்தாத்தில் நடைபெற்ற தொடர் தாக்குதலில் 70 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.
Average Rating