இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்தில் – 8 மாதக் குழந்தை உட்பட இருவர் பலி..!!
இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்தில் எட்டு மாதக் குழந்தை உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
களுத்துறை – மதுகம வீதியின் ரேன்தபொல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறு குழந்தை ஒன்று மரணமடைந்துள்ளது.
முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது, காயமடைந்த, நால்வர் நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை, அதில் 8 மாத குழந்தை ஒன்று பலியாகியுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை தொடன்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, பதியத்தலாவ – மஹவெவ வீதியின் புளுன்கஸ்முல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஒன்று தனது கட்டுப்பாட்டை மீறி, வீதியைவிட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக, தெரியவந்துள்ளது.
இதன்போது, படுகாயமடைந்த, மஹஓய – இத்தபொல பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் (மோட்டார் சைக்கிள் சாரதி) பதியதலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பலியாகியுள்ளார்
Average Rating