வலி.வடக்கு 201 ஏக்கர் காணி இன்று விடுவிப்பு…!!

Read Time:1 Minute, 36 Second

55-4வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்து மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக மேலும் 201 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஆகியோர் இணைந்து குறித்த காணிகளை பொது மக்களிடம் கையளித்துள்ளனர்.

இக் காணி கையளிப்பு நிகழ்வு வடக்கின் இறுதி ரயில் நிலையமான காங்கேசன்துறை ரயில் நிலையத்திற்கு முன்பாக பிரத்தியோகமாக அமைக்கப்பட்ட மேடையில் நடைபெற்றிருந்தது.

இந்நிகழ்வில் காங்கேசன்துறை, வசாவிளான், கட்டுவன் போன்ற பகுதிகள் விடுவிப்புக்காக 201 ஏக்கர் காணிகளுக்கான சான்றிதழ்கள் உரியையாளர்களிடம் வழங்கிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந் நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன், மாவட்ட காணி உதவி மேலதிக அரசாங்க அதிபர் முரளீதரன், தெல்லிப்பளை பிரதேச செயலர் சிறிமோகன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சங்குபிட்டி பலத்திற்கு அருகில் கோர விபத்து ; பொலிஸ் உத்தியோகத்தர் பலி…!!
Next post யாழ்.வங்கி போலி நாணய தாள்கள் தொடர்பில் திடுக்கிடும் தகவல் வெளியானது…!!