கேரளாவில் இளம்பெண் கடத்தி கற்பழிப்பு: அசாம் மாநில வாலிபர்கள் 2 பேர் கைது…!!
கேரளாவில் ஏராளமான வெளிமாநிலத்தவர்கள் தங்கி இருந்து கட்டிட வேலை மற்றும் கூலித்தொழில் செய்து வருகிறார்கள். கர்நாடகம், ஆந்திரா, அசாம் மாநிலங்களை சேர்ந்தவர்கள் இவர்களில் அதிகமாக உள்ளனர்.
இந்த நிலையில் கேரளாவில் நடைபெறும் கொள்ளை, திருட்டு, பாலியல் வன்முறைகள் போன்றவற்றில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிமாநிலத்தவர்களாக இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா கொலை வழக்கிலும் அசாம் மாநில வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார். இதனால் வெளி மாநிலத்தவர்களை கண் காணிக்க போலீசார் பல்வேறு நடைமுறைகளை கடைபிடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஒரு இளம்பெண்ணை மயக்க மருந்து கொடுத்து கற்பழித்ததாக அசாம் மாநில வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்டவர் பத்தனம்திட்டா கரிமுகம் பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண் ஆகும்.
இவர் கடந்த சில நாட் களுக்கு முன்பு தனது வீடு அருகே நடந்து சென்ற போது அசாம் மாநிலத்தை சேர்ந்த அனார்உசேன் (வயது 19), சாகுல் (20) ஆகியோர் அவருக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தினார்கள். அதன்பிறகு அந்த பகுதியில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு வீட்டில் அடைத்து வைத்து அந்த பெண்ணை தொடர்ந்து கற்பழித்து உள்ளனர்.
அந்த வீட்டில் வாலிபர்கள் நடமாடுவதை பார்த்து சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசில் புகார் செய்ததை தொடர்ந்து அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்த வாலிபர்கள் இதுபோல வேறுஏதும் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டார்களா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating