அடுத்த கட்டமாக அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டம்…!!
சமீபத்தில் அமெரிக்காவின் ஓர்லண்டோவில் ஓரின சேர்க்கையாளர்கள் கேளிக்கை விடுதியில் ஒமர்மதீன் என்ற ஐ.எஸ். தீவிரவாதி புகுந்து துப்பாக்கியால் சுட்டான். அதில் 49 பேர் பலியாகினர். இதற்கிடையே துப்பாக்கி சூடு நடத்திய ஒமர்மதீன் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த நிலையில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் சமீபத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.
அதில், ஓர்லண்டோ கொலையாளி ஒமர்மதீனின் தைரியத்துக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அத்துடன்அடுத்தபடியாக அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ மற்றும் லாஸ்வேகாஸ் ஆகிய நகரங்களில் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டுள்ளதை குறிப்புடன் உணர்த்தியுள்ளது தெரியவந்துள்ளது.
வீடியோவில் ஐ.எஸ் தீவிரவாதி ஒருவன் சான்பிரான்சிஸ்கோ நகர வீதியில் கார் ஓட்டி செல்கிறான். அந்த கார் அந்நகரின் முக்கிய பகுதியான கோல்டன் கேட் பிரிட்ஜை தாண்டி செல்கிறது. அதன் பின்னர், அங்குள்ள முக்கிய இடங்கள் வீடியோவில் குறிப்பிட்டு காட்டப்படுகின்றன.
அதே போன்று லாஸ்வேகாஸ் நகரின் முக்கிய பகுதிகளும் வீடியோவில் படம் பிடித்து காட்டப்படுகின்றன. இதன்மூலம் இங்கு தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களின் உயிரை பறிக்க ஐ.எஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
Average Rating