குளவி கொட்டுக்கு இலக்காகி 12 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி…!!
Read Time:58 Second
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை டிலிகுற்றி தோட்டத்தில் கொழுந்து பறிக்கும் தொழில் ஈடுபட்டு கொண்டியிருந்த 12 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஆண்கள் 05 பேரும் பெண்கள் 07 பேரும் இச்சம்பவத்தில் பாதிக்கபட்டுள்ளனர்.
இவர்களில் 06 பேர் வைத்திய சிகிச்சையின் பின் வீடு திரும்பியதாகவும், 06 பேர் தொடர்ச்சியாக தங்கி சிகிச்சைப்பெற்று வருவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Average Rating